Sunday, September 11, 2011

எந்த மாதத்தில் பிறந்தவர்களை எந்த நோய் தாக்கும் தெரியுமா --எதிர்காலத்தில் அவர்கள் வகிக்கும் பதவி மற்றும் வேலை?

எந்த மாதத்தில் பிறந்தவர்களை எந்த நோய் தாக்கும் தெரியுமா --எதிர்காலத்தில் அவர்கள் வகிக்கும் பதவி மற்றும் வேலை?

பிறப்பும், இறப்பும் மனிதர்களின் கையில் இல்லை. குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட மாதத்தில் பிறக்க வேண்டும் என்பது எவ்வாறு இறைவனால் நிச்சயிக்கப்பட்டதோ அதேபோல ஒருவரின் இறப்பும் முதலிலேயே நிர்ணயம் செய்யப்பட்டதுதான்.
ஒருவரின் பிறந்த மாதத்திற்கும் அவர்களுக்கு தோன்றும் நோய்கள், வகிக்கும் பதவிகளுக்கும் தொடர்பிருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஒருவர் பிறந்த மாதத்திற்கும் அவரை தாக்கும் நோய்க்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது. அமெரிக்காவின் தென்மேற்கு முசௌரி மாநில பல்கலைக்கழகமும், ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து ஆய்வு மேற்கொண்டு அதன் முடிவை வெளியிட்டுள்ளனர்.
கற்றல் குறைபாடு
ஜனவரியில் பிறந்தவர்களுக்கு அல்சீமர் நோய் தாக்குதல் அதிகம் இருந்தது தெரியவந்தது. பிப்ரவரியில் பிறந்தவர்களுக்கு பிபோலர் டிசாடர் நோயும், மார்ச் மாதத்தில் பிறந்தவர்களுக்கு நரம்பு தொடர்பான நோய்களும், ஆட்டிசம் தாக்குதலும் இருந்தது கண்டறியப்பட்டது.
ஏப்ரல், மே மாதங்களில் பிறந்தவர்களுக்கு டிஸ்லெக்சியா எனப்படும் கற்றல் குறைபாடு நோய் தாக்குதல் அதிகம் காணப்பட்டது.
நுரையீரல் நோய்கள்
ஜூன், ஜூலை,ஆகஸ்ட் மாதங்களில் பிறந்தவர்களுக்கு நீரிழிவு, பர்க்கின்சன் எனப்படும் நோய்கள் தாக்கியிருந்தது கண்டறியப்பட்டது. செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் பிறந்தவர்கள் ஆஸ்துமா, நுரையீரல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
டிசம்பர் மாதத்தில் பிறந்தவர் தோல் பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர்
இந்த ஆய்வு முடிவினை மருத்துவ உலகத்தினரும் உண்மை என்று ஒத்துக்கொண்டிருக்கின்றனர். சீசனைப் பொருத்தே நோய்கள் தோன்றுவதால் ஒருவர் பிறக்கும் மாதத்திற்கும் அவர்களுக்கு வரும் நோய்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.


தொழிலுக்கும் பிறப்புக்கும் தொடர்பு
அதேபோல குழந்தைகள் பிறக்கும் மாதத்திற்கும், எதிர்காலத்தில் அவர்கள் வகிக்கும் பதவி மற்றும் வேலைக்கும் தொடர்பு இருப்பதாக லண்டன் நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த முறை நடத்தப்பட்ட தேசிய கணக்கெடுப்பு அறிக்கையினை பயன்படுத்தி அவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அதில் ஜனவரியில் பிறந்தவர்கள் ஆட்சியராகவும், பிப்ரவரியில் பிறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் நடிகர்களாகவும் உள்ளதாக தெரியவந்தது.
மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் விமானி ஆகவும், ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் பிறந்தவர்கள் பெயர் சொல்லக்கூடிய வேலையிலும் இருக்கின்றனர்.
இந்த ஆய்வின் மூலம் குழந்தைகள் பிறந்த மாதங்களின் அடிப்படையில் அவர்கள் 19 விதமான பணிகளில் இருப்பர் என கண்டறியப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் பிறந்த குழந்தைகள் எதிர்காலத்தில் பல் டாக்டர்களாக பணி புரிவதாக கண்டறிந்துள்ளனர்.
அமாவாசையில் பிறப்பது யோகம்
அமாவாசை திதியில் பிறப்பவர்கள் யோகம் நிறைந்தவர்கள் என்று சோதிடவியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசையைப் பொருத்து அவர்களின் குணநலன் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சித்திரை மாத அமாவாசையில் பிறந்தவர்கள் நல்ல குணமுடையவர்களாகவும், வைகாசியில் பிறந்தவர்கள் பொய்கூறுபவர்களாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனி மாதத்தில் பிறந்தவர்களுக்கு கொடுக்கும் குணமும், ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் அப்பாவியாகவும், படைப்பாற்றல் மிக்கவர்களாகவும் இருப்பர்.
நாடாளும் ராஜதந்திரிகள்
ஆவணி மாத அமாவாசையில் பிறந்தவர்கள் ராஜ தந்திரிகளாகவும், உள்ளூணர்வு மிக்கவர்களாகவும், புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் ஆராய்ச்சியில் ஆர்வம் மிக்கவர்களாகவும், ஐப்பசியில் பிறந்திருந்தால் ஓயாத மனப் போராட்டம் கொண்டவர்களாக இருந்தாலும் மற்றவர்களுக்கு வழி காட்டுபவர்களாக இருப்பார்கள்.
கார்த்திகையில் பிறந்திருந்தால் நாடாளுபவர்களாகவும், நாடாளுபவர்களின் நட்பு பெற்றவர்களாகவும், ஆவணங்களை உருவாக்குவதில் கை தேர்ந்தவர்களாகவும், மார்கழியில் பிறந்தவர்கள் துறவிகள் போன்று நாற்பது வயதிலேயே முதிர்ச்சி அடைந்துவிடுவர்.
தை மாதத்தில் பிறந்தால் சுற்றத்தாரை விரும்புவராகவும், பங்குனி மாதத்தில் பிறந்தவர்கள் திறமைசாலிகளாகவும் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மாசி மாதத்தில் பிறந்தவர்கள் சோபிக்க மாட்டார்கள் என்றும் அவர்களது வாழ்க்கைத் துணையைப் பொறுத்தே அவர்களது வாழ்க்கை சோதிட ரீதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீங்க எப்ப பிறந்தீங்க,எப்படி இருக்கீங்க..?

THANKS:vanakkamnet


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் vote-ஐ பதிவு செய்யவும் - நன்றியுடன் jskpondy

Thursday, September 01, 2011

குடமிளகாய் -அசத்தல் சமையல்

குடமிளகாய் பொடி புலாவ்
தேவையான பொருட்கள்
குடமிளகாய்-1
வெங்காயம்-1
காரட்-1
பட்டாணி-1 கப்
கடலைப்பருப்பு-1/2 கப்
வெள்ளை உளுத்தம்பருப்பு-1/4கப்
மிளகாய் வற்றல்-8
காயம்-சிறிதளவு
உப்பு-தேவையான அளவு
கறிவேப்பிலை-1 இணுக்கு
சாதம்-தேவையான அளவு
செய்முறை
1.ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,கடலைப்பருப்பு,வெள்ளை உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிசம் செய்யவும்.
2.அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
3.நறுக்கிய குடமிளகாய்,காரட்,பட்டாணி சேர்த்து உப்பு,மஞ்சள் பொடி சேர்த்து தண்ணீர் விடாமல் மூடி வைத்து வேக விடவும்.அவ்வப்போது கிளறி விடவும்.
4.ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு,வெள்ளை உளுத்தம்பருப்பு,மிளகாய்வற்றல், காயம் சேர்த்து வதக்கவும்.
5.பருப்புகள் ஆறியவுடன் மிக்ஸியில் கரகரப்பாகத் திரித்து எடுத்து வெந்த காய்கறிகளுடன் சேர்க்கவும்.
6.சாதத்தை உதிர் உதிராக வேக வைத்து ஒரு அகன்ற பாத்திரத்தில் ஆற விட வேண்டும்.
7.காய்கறிக்கலவை ஆறியவுடன், சாதத்துடன் சேர்த்துக் கலக்க குடமிளகாய் மிளகாய்பொடி புலாவ் தயார்.
கூடுதல் குறிப்புகள்
1.மிகவும் ருசியான இந்தப் புலாவ் விரைவில் தயார் செய்யலாம்.
2.பருப்புகளை வறுத்துத் திரிப்பதற்குப் பதில் மிளகாய்ப்பொடியையே காய்கறிக்கலவையுடன் சேர்த்து செய்யலாம்.
3.திரித்த பருப்புகளை முழுவதுமாக சாதத்துடன் கலக்காமல் காரத்திற்கு ஏற்ப சிறிது சிறிதாகக் கலக்கலாம்.



குடமிளகாய் தால் தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு-1 கப்
குடமிளகாய்-1
பெரிய வெங்காயம்-1
தக்காளி-1
சீரகம்-1/2 டீஸ்பூன்
பச்சைமிளகாய்-4
நெய்-1 டீஸ்பூன்
செய்முறை:
1.குக்கரில் பாசிப்பருப்பைக் குழைய வேக விடவும்.
2.காய்கறிகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3.வாணலியில் நெய் விட்டு சீரகம்,பச்சைமிளகாயைப் போட்டு வதக்கவும்,பிறகு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி போட்டு வதக்கவும்.
4.பொடியாக நறுக்கி வைத்துள்ள குடமிளகாயைச் சேர்த்து வதக்கவும். உப்பு போட்டு மூடி வைத்து வேக விடவும்.
5.வெந்த பாசிப்பருப்பை வேக வைத்த காய்கறிகளுடன் சேர்த்து எலுமிச்சை பிழிந்து இறக்கி வைக்கவும்.
6.தாலில் அலம்பிய கொத்தமல்லித் தழையைத் தூவவும்.
கூடுதல் குறிப்புகள்
1.பத்தே நிமிடங்களில் தயார் செய்யக்கூடிய எளிய தால் சப்பாத்தி,பூரி வகையறாக்களுக்குச் சிறந்த இணை.
2.பாசிப்பருப்பிற்குப் பதில் துவரம்பருப்பு சேர்த்தும் இந்த தால் செய்ய வித்தியாசமான ருசி கிடைக்கும்.
3.பச்சைமிளகாய் காரத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளலாம்.
4.எலுமிச்சையை முதலிலேயே பிழியக் கூடாது, தாலை இறக்கி வைக்கும் போது தான் பிழிந்து விட வேண்டும்.


குடமிளகாய் கொத்ஸ¤
தேவையான பொருட்கள்
குடமிளகாய்-1
வெங்காயம்-1
நாட்டுத்தக்காளி-1
காயம்-சிறிதளவு
எண்ணெய்-1 டீஸ்பூன்
கடுகு-1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு-1 டீஸ்பூன்
வெள்ளை உளுத்தம்பருப்பு-1 டீஸ்பூன்
கறிவேப்பிலை-1 இணுக்கு
சாம்பார்பொடி-1 டீஸ்பூன்
கொத்தமல்லி-தேவையான அளவு
செய்முறை
1.காய்கறிகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2.வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,கடலைப்பருப்பு,வெள்ளை உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிசம் செய்து கொள்ளவும்.
3.வெங்காயத்தைச் சிவக்க வதக்கவும்.
4.தக்காளி,குடமிளகாயை வதக்கிய வெங்காயத்துடன் சேர்த்து உப்பு,சாம்பார்பொடி,காயம் சேர்த்து மூடிக் கொள்ளவும்.அவ்வபோது கிளறி விடவும்.
5.காய்கறிகள் வெந்தவுடன் ஒரு பாத்திரத்தில் மாற்றி கொத்தமல்லியைத் தூவி அலங்கரிக்கவும்.
கூடுதல் குறிப்புகள்
1.கொத்ஸ¤வில் காரம் அதிகமாகி விட்டால் கொத்ஸ¤வை இறக்கும் போது எலுமிச்சை பிழிந்து விடலாம். இல்லையென்றால் வெல்லம் சேர்த்து மீண்டும் கொதிக்க வைக்கக் காரம் மட்டுப்படும்.
2.பூண்டு சேர்க்க விரும்புபவர்கள் வெங்காயத்தை வதக்கும் போது அரைப் பல்லு சேர்த்துக் கொள்ளலாம்.
3.சப்பாத்தி,பூரி,இட்லி,தோசை போன்ற சிற்றுண்டிகளுக்குச் சிறந்த துணை இந்தக் குடமிளகாய் கொத்ஸ¤.
4.சாம்பார் வெங்காயம் மற்றும் நாட்டுத்தக்காளியில் குடமிளகாய் கொத்ஸ¤ செய்ய சுவை அதிகரிக்கும்.
5.புளிப்புச்சுவை வேண்டுவோர் புளிநீரைக் கெட்டியாகக் கரைத்து காய்கறிகளுடன் சேர்த்துக் கொதிக்க வைக்க சுவையான புளிப்புக்குடமிளகாய்கொத்ஸ¤ தயார்.


குடமிளகாய் ஊத்தப்பம்
தேவையான பொருட்கள்
வெங்காயம்-1
தக்காளி-1
குடமிளகாய்-1
பச்சைமிளகாய்-2
இட்லிமாவு-தேவையான அளவு
செய்முறை
1.காய்கறிகளையும் பச்சைமிளகாயையும் மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2.தோசைக்கல்லில் இட்லிமாவை வட்டமாக ஊற்றி உடனேயே வெங்காயத்தையும் குடமிளகாயையும் மாவைச் சுற்றிலும் தூவ வேண்டும்.
3.பிறகு தக்காளி,பச்சைமிளகாயைப் போடவும்.
4.ஊத்தப்பத்தைச் சுற்றி எண்ணெய் விடவும்.
5.வெந்தவுடன் ஊத்தப்பத்தைத் திருப்பிப் போட்டு வேக விடவும்.
கூடுதல் குறிப்புகள்
1.வெறும் தோசையாக உண்ணாமல் காய்கறிகள் சேர்த்து ஊத்தப்பம் செய்து உண்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
2.மாவு கொஞ்சமாக இருந்தால் காய்கறி ஊத்தப்பம் செய்து உண்டால் உண்ட திருப்தியும் கிடைக்கும்.
3.மாவைத் தோசைக்கல்லில் ஊற்றி காய்கறிகள் போட்ட பிறகு தோசைமிளகாய்ப்பொடியை மாவைச் சுற்றிலும் தூவி வேகவைக்க பொடிவெஜிடபிள்ஊத்தப்பம் தயார். மிளகாய்ப்பொடி சேர்க்க விரும்பினால் பச்சைமிளகாய் சேர்க்கத் தேவையில்லை.
4.சுவையான ஊத்தப்பத்திற்குச் சட்னியோ,சாம்பாரோ தேவையில்லை. வெறுமனே உண்ணவே நன்றாக இருக்கும், ஒரே ஒரு விஷயம் என்னவென்றால் சூடாக இருக்கும் போதே இந்த ஊத்தப்பத்தை உண்ண வேண்டும். ஆறினால் நன்றாக இருக்காது.


டிப்ஸ்:
1.சமைத்தக் காய்கறிகளைத் தினமும் இரண்டு வேளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
2.உணவகங்களில் பச்சைக் காய்கறிகளையோ தயிர்சாதத்தையோ சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்(உணவகங்களில் தயிர்சாதத்திற்குப் பயன்படுத்தும் சாதம் மிகவும் பழைய சாதம் என்பதால் தயிர்சாதம் மட்டும் உணவகங்களில் உண்ணக் கூடாது)
3.பூண்டைத் தண்ணீரில் மூழ்க வைத்து பத்து நிமிடங்கள் கழித்து உரிக்க சுலபமாக வரும்.
4.வெங்காயம் வதக்கும் போது சிறிது உப்பு சேர்த்து வதக்க சீக்கிரம் வதங்கும்.
5.காய்கறிகளை மூடி வைத்துச் சமைக்க சீக்கிரம் வேகும்.நேரமும் மிச்சமாகும்.
6.உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் குடமிளகாயை உணவில் சேர்த்து வர நல்ல பலனளிக்கும்.குடமிளகாயில் கொழுப்புச்சத்து,கொலஸ்ட்ரால்,சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும்.
7.குடமிளகாயில் உள்ள விட்டமின் ஏ,சி,ஈ,பி6 போன்ற சத்துக்கள் ஆரோக்கியமான தேகத்தைக் கொடுக்கும்.
8.கண்பார்வையைச் சிறப்பாக்கவும் இளமையிலேயே கண் தொடர்பான பிரச்சினைகளை அண்ட விடாமலும் குடமிளகாய் காக்கிறது என்பதைச் சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
9.குடமிளகாயைச் சமைக்கும் முன் நன்கு அலம்ப வேண்டும்.
10.குடமிளகாயைத் துச்சமாக எண்ணாமல் அதன் பலன்களைக் கருத்தில் கொண்டு  பயன்படுத்துவது ஆரோக்கியமான வாழ்விற்கு நல்லது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் vote-ஐ பதிவு செய்யவும் - நன்றியுடன் jskpondy

காக்கை சனி பகவானின் வாகனமா? ஏன்?.... ஜோதிடத்தில் சனி பகவானை ஆயுள் காரகன் என்று கூறுகிறார்கள்...ஏன்?.. எள் எண்ணெயால் தீபம் ஏற்றுவது ஏன்?...


கண்ணுக்கு தெரியும் கிரகங்களில்(இருள் சூழ்ந்த இரவு நேரத்தில் பார்க்கலாம்) மிக மெதுவாகவும் ஒரு சுற்று வர நீண்ட காலம் அதாவது 30 வருடங்கள் எடுத்துக்கொள்ளும்...
மேலும் இவருக்கு உகந்த தானியம் எள்ளு ஆகும்....எள் உட்கொண்டால் ஞாபக சக்தி அதிகரிப்பதுடன் ஆயுளும் கூடும் ஆனாள் பசு நெய் உட்கொண்டால் நோய் வரும் வாய்ப்புகள் அதிகம்...

மேலும் காகம் ஆயுள் காரகனான சனி பகவானின் வாகனம் என்கிறார்கள் ...
அந்த காலங்களில் நாம் உண்ணும உணவு சுகாதாரமாக, விஷம் கலக்காமல் உள்ளதா என கண்டுபிடிக்கும் சாதனம் எதுவும் இல்லை...
உறவுகளும் நட்புகளும் கலந்து கொள்ளும் விழாக்களில் விழா நடத்துபவர்களுக்கு வேண்டாதவர்கள் விஷம் கலந்து வைத்தால் கண்டு பிடிக்க முடியாமல் வம்சமே அழிந்து விடும்....இதற்காக முன்னோர்கள் ஏற்படுத்திய விஞ்ஞானபூர்வமான ஏற்பாடே காகத்திற்கு உணவு வைப்பது...
இருக்கும் உயிரினங்களில் தன் இனத்தை அழைத்து உணவருந்துவது காகம் மட்டுமே அவ்வாறு அழைக்கும் காகம் அந்த உணவை தான் மட்டுமே உண்ணும....மற்ற காகங்கள் உண்ணாது...இவ்வாறு உண்ட காகம் மூன்று நிமிடங்களுக்கு மேற்பட்டு உயிருடன் இருந்தால் மற்ற காகங்களும் உண்ணும....விஷம் கலந்திருந்தால் அந்த உணவுண்ட முதல் காகம் மூன்று நிமிடங்களுக்குள் இறந்து விடும் 
ஆக காகத்திற்கு உணவிட்டு அந்த காகம் உயிருடன் இருந்தால் விழா நடத்தும் மனிதர்களும் உணவருந்தலாம்
மனிதர்களின் உயிருக்கு ஆபத்தில்லாமல் ஆயுள் காப்பதால் காகத்தை ஆயுள் காரகனின் வாகனம் என்கிறார்கள்...

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் vote-ஐ பதிவு செய்யவும் - நன்றியுடன் jskpondy